போடாத சாலைக்கு போட்டதாக வைத்த கல்வெட்டு.. விழுங்கப்பட்ட ரூ.13 லட்சம்..

0 31047
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே புதுப்பிக்காத மயான சாலையை புதுப்பித்து விட்டதாகக் கூறி கல்வெட்டு வைத்துவிட்டு, 13 லட்ச ரூபாய் மோசடி செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே புதுப்பிக்காத மயான சாலையை புதுப்பித்து விட்டதாகக் கூறி கல்வெட்டு வைத்துவிட்டு, 13 லட்ச ரூபாய் மோசடி செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

துளசாபுரம் ஊராட்சி கண்டிவாக்கம் கிராமத்தில் இருந்து மயானத்துக்கு செல்லும் பாதை குண்டும் குழியுமாக சேதமடைந்து உள்ளது. இந்த சாலையை புதுப்பிக்க 13 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, டெண்டரும் விடப்பட்டது.

இதுவரை சாலை செப்பனிடப்படாத நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே பணிகள் முடிவடைந்து விட்டதாகக் கூறி அங்கு கல்வெட்டு வைத்துள்ளனர்.

இந்த முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள், ஒப்பந்ததாரர் என அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments