தமிழக அரசின் தீர்மானத்திற்கு மதிப்பில்லை - கர்நாடக அமைச்சர் சர்ச்சை கருத்து

0 1477
காவிரியின் குறுக்கே மேகதாதுவில், கர்நாடக அரசு அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதற்கு எந்த மதிப்பும் இல்லை என்று கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் கோவிந்த் கர்ஜோல் தெரிவித்திருக்கும் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில், கர்நாடக அரசு அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதற்கு எந்த மதிப்பும் இல்லை என்று கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் கோவிந்த் கர்ஜோல் தெரிவித்திருக்கும் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், மேகதாது திட்டத்தை கர்நாடக அரசு நிறைவேற்றும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேகதாதுவில் அணை கட்டினால் தமிழக விவசாயிகளின் நலன் பாதிக்கப்படும் என்பதால், மத்திய அரசு அதற்கு அனுமதி அளிக்க கூடாது என்று தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், கர்நாடக அரசு அணை கட்டுவதில் பிடிவாதமாக உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments