60 கி.மீ.க்குள் அருகருகே இருக்கும் சுங்கச்சாவடிகள் மூடப்படும் - அமைச்சர் நிதின்கட்கரி

0 2253
தேசிய நெடுஞ்சாலைகளில் 60 கிலோ மீட்டர் தொலைவுக்குள் இருக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் அடுத்த மூன்று மாதங்களுக்குள் மூடப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்காரி அறிவித்துள்ளார்.

தேசிய நெடுஞ்சாலைகளில் 60 கிலோ மீட்டர் தொலைவுக்குள் இருக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட  சுங்கச்சாவடிகள் அடுத்த மூன்று மாதங்களுக்குள் மூடப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவையில் பேசிய அவர், 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் சாலை உள்கட்டமைப்பு வசதிகள், அமெரிக்காவில் இருப்பதை போல் இருக்கும் என்று உறுதி அளித்தார்.

பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், 8 பேர் வரை பயணிக்க கூடிய வாகனங்களில் குறைந்தபட்சம் 6 ஏர் பேக்குகள் இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றும் நிதின்  கட்கரி தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments