நடத்தையில் சந்தேகம்.. மனைவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு தனது கழுத்தையும் அறுத்துக் கொண்ட கணவன்..!

0 2097

பெங்களூரு அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரது கழுத்தை அறுத்துக் கொலை செய்த கணவன், தடுக்க வந்த மகனையும் காயப்படுத்திவிட்டு, தனது கழுத்தையும் அறுத்துக் கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அத்திப்பள்ளி அடுத்த அப்பண்ணபாளையாவைச் சேர்ந்தவர்கள் சம்பத் - லாவண்யா தம்பதி. 2 மகன்கள் உள்ள நிலையில், சம்பத்துக்கு குடிப்பழக்கம் இருந்ததாகவும் அதனால் இருவருக்கும் தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. இரு தினங்களுக்கு முன் லாவண்யாவின் பெற்றோர் வந்து தம்பதியை சமாதானம் செய்து சென்றதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை சமையலறை கத்தியை எடுத்து தூங்கிக் கொண்டிருந்த லாவண்யாவின் கழுத்தை சம்பத் அறுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

தந்தையைத் தடுக்க வந்த மூத்த மகனுக்கும் கையில் கத்திக்குத்து விழுந்துள்ளது. தொடர்ந்து தனது கழுத்தையும் அறுத்துக் கொண்ட சம்பத், ரத்தம் வழிய வெளியே ஓடிவந்து கழிவுநீர் கால்வாயில் விழுந்துள்ளார். தகவலறிந்து வந்த போலீசார், சம்பத்தையும் அவரது மகனையும் மருத்துவமனையில் சேர்த்து விசாரித்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments