உத்திரபிரதேசத்தில் ஹோலி கொண்டாடிவிட்டு திரும்பிய கல்லூரி மாணவர்களின் கார் கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதியதில் 3 மாணவர்கள் பலி.!

0 1751

உத்திரபிரதேசத்தில் ஹோலி கொண்டாடிவிட்டு திரும்பிய மருத்துவக் கல்லூரி மாணவர்களின் கார் கட்டுப்பாட்டை இழந்து, எதிர்புற சாலையில் வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர்.

லக்னோவில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பயின்று வந்த 4 மாணவர்கள், ஹோலி பண்டிகையை கொண்டாடுவதற்காக ராம்பூர் சென்றுவிட்டு மீண்டும் கல்லூரிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

சாலை குண்டும் குழியுமாக இருந்த நிலையில், வேகமாக வந்ததால் கார் கட்டுப்பாட்டை இழந்தது. ஓட்டுனர் வாகனத்தை கட்டுப்படுத்தும் முன் அது டிவைடரை தாண்டி சாலையின் மறுபுறம் சென்று, எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் 3 மாணவர்கள் உயிரிழந்த நிலையில், ஒரு மாணவர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments