அனைத்து பள்ளிகளிலும் மாணவிகளுக்கு இலவசமாக சானிட்டரி நாப்கின் வழங்கப்படும் - மேயர் பிரியா

0 2540
அனைத்து பள்ளிகளிலும் மாணவிகளுக்கு இலவசமாக சானிட்டரி நாப்கின் வழங்கப்படும்

சென்னை மாநகராட்சியின் அனைத்து பள்ளிகளிலும் மாணவிகளுக்கு இலவசமாக சானிட்டரி நாப்கின் வழங்கப்படும் என மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

ஜாபர்கான் பேட்டை மாநகராட்சி பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் சேர்ந்து திறந்து வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய மேயர் பிரியா, சென்னை மாநகராட்சியில் சில பள்ளிகளில் மட்டும் மாணவிகளுக்கு இலவச நாப்கின் வழங்கப்படுவதாகவும், தற்போது அனைத்து பள்ளிகளிலும் இலவசமாக நாப்கின் வழங்க முடிவு செய்துள்ளதாகவும் கூறியதோடு, இது குறித்த அறிவிப்பு மாநகராட்சி பட்ஜெட்டில் இடம்பெறும் என தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments