சென்னையில் பென்ஸ் கேளிக்கை விடுதியின் உரிமையாளர் பென்ஸ் சரவணன் 80 லட்சம் ரூபாய் மோசடி வழக்கில் கைது.!

0 5977

சென்னையில் இயங்கி வரும் பென்ஸ் கேளிக்கை விடுதியின் உரிமையாளர் பென்ஸ் சரவணனை, 80 லட்சம் ரூபாய் மோசடி வழக்கில் மத்திய குற்றப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.

கோவை ஆல்பா ஹோட்டல்'ஸ் உரிமையாளர் சபரி கணேஷ் என்பவர், சென்னையில் "OH THAT PLACE" என்ற பெயரில் கேளிக்கை விடுதி தொடங்க இடம் தேடிக் கொண்டிருந்தார்.

அப்போது, சபரி கணேஷை அணுகிய பென்ஸ் சரவணன் அண்ணா சாலையில் உள்ள வெலிங்டன் பிளாசா வளாகத்தில் அதற்கான இடம் இருப்பதாகவும் தன்னிடம் கேளிக்கை விடுதிக்கான உரிமமும் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

பின்னர் அதற்கான ஒப்பந்தம் போட்டு, 80 லட்சம் ரூபாயினை பல்வேறு தவணையாக பெற்றுக் கொண்ட பென்ஸ் சரவணன் இடத்தையும் தராமல் கேளிக்கை விடுதிக்கான உரிம ம் மற்றும் பணத்தை திருப்பித் தராமல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் சபரி கணேஷ் கொடுத்த புகாரில் விசாரணை நடத்திய போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்து பென்ஸ் சரவணனை கைது செய்துள்ளனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments