எதிரெதிர் திசையில் பயணித்த 2 பயணிகள் ரயில்கள் நேருக்குநேர் மோதி விபத்து... 95 பேர் காயம்

0 3447

துனிசியாவின் தெற்கு பகுதியில் ஒரே வழித்தடத்தில் எதிரெதிர் திசையில் பயணித்த 2 பயணிகள் ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், 95 பேர் காயமடைந்தனர்.

தெற்கு துனிஸின் Jbel Jelloud பகுதியில், பயணிகள் ரயில்கள் நேருக்கு நேர் மோதியதில் பலர் காயங்களுடன் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் எலும்பு முறிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்புகள் ஏதும் பதிவாகவில்லை என அவசர சேவைப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments