தருமபுரியில் போலி தங்க நகையை கொடுத்து இளம்பெண்ணை ஏமாற்றி 5 லட்சம் ரூபாய் மோசடி செய்த இளைஞர் கைது.!

0 1897

தருமபுரியில் போலி தங்க நகையை கொடுத்து இளம்பெண்ணை ஏமாற்றி 5 லட்சம் ரூபாய்  மோசடி செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

அதியமான்கோட்டையைச் சேர்ந்த அனிதா என்ற பெண் வியாபாரம் செய்யும் ஆசையில் குடியாத்தத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரிடம்  5 லட்சம் ரூபாய்க்கு அரை கிலோ தங்கக் கட்டிகளை வாங்கியுள்ளார்.

பின்னர் அந்த கட்டிகள் போலி என தெரிய வந்ததை அடுத்து அனிதா தருமபுரி நகர காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த வெங்கடேசனை கைது செய்தனர்.

மேலும் அவரிடம் இருந்து 5 லட்சம் ரொக்கம், 27 சவரன் தங்க நகைகள் மற்றும் அரை கிலோ போலி தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments