புதிதாக தரம் உயர்த்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் விரைவில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படும் ; அமைச்சர் கே.என்.நேரு

0 4339
புதிதாக தரம் உயர்த்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் விரைவில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படும்

புதிதாக தரம் உயர்த்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் விரைவில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படும் என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் மாதவரம் தொகுதிக்கு உட்பட்ட செங்குன்றம் பேரூராட்சியை சென்னை மாநகராட்சியுடன் இணைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா? என எம்.எல்.ஏ. சுதர்சனம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு, உடனடியாக முடியாவிட்டாலும், உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும், நூறு நாள் வேலை திட்டம் இல்லையென்பதால் மாநகராட்சியுடன் இணைய பேரூராட்சிகள் விரும்புவதில்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

வேலூர் மாவட்டத்திலுள்ள ஊராட்சிகளை பேரூராட்சிகளாக மாற்ற வேண்டும் என அந்த தொகுதி எம்.எல்.ஏ. வைத்த கோரிக்கைக்கு, குழு அமைத்து மறு ஆய்வு செய்து ஒன்றியங்கள், ஊராட்சிகள், பேரூராட்சிகள் அதிகப்படுத்தப்படும் என அமைச்சர் கே.என்.நேரு உறுதியளித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments