கீவில் வணிக வளாகத்தின் மீது ரஷ்ய ராணுவம் குண்டுவீசித் தாக்குதல் ; 6 பேர் பலி

0 2347
கீவில் வணிக வளாகத்தின் மீது ரஷ்ய ராணுவம் குண்டுவீசித் தாக்குதல் ; 6 பேர் பலி

உக்ரைன் தலைநகர் கீவில் வணிக வளாகத்தின் மீது நேற்றிரவு ரஷ்ய ராணுவம் குண்டுவீசித் தாக்கியதில் குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டதாக ஏஎப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கீவில் மூன்று வாரங்களுக்கு மேல் முற்றுகை நீடிக்கும் நிலையில் நேற்றிரவு ரஷ்யா போர் விமானங்கள் மூலமும், ஏவுகணைகள் மூலமும் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியது.

ஒரு வணிக வளாகத்தின் மீது வீசிய குண்டுவெடித்ததில் கட்டடமும், முன்னால் நிறுத்தப்பட்டிருந்த காரும் தீப்பற்றி எரிந்தன. இந்தத் தாக்குதலில் குறைந்தது 6 பேர் உயிரிழந்ததாக ஏஎப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.



SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments