இந்தியாவின் பழைமையான கலைப்பொருட்களைத் திருப்பிக் கொடுத்ததற்கு ஆஸ்திரேலியாவுக்கு நன்றி கூறிய பிரதமர்

0 1820

ந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக எடுத்துச் செல்லப்பட்ட கலைப்பொருட்களை ஆஸ்திரேலியா திருப்பிக் கொடுத்ததற்கு நாட்டு மக்களின் சார்பில் பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

இந்திய - ஆஸ்திரேலிய நாடுகளிடையான மாநாட்டில் இரு நாட்டுப் பிரதமர்களும் காணொலியில் பங்கேற்றனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, இரு நாடுகளும் வணிகம், முதலீடு, பாதுகாப்பு, கல்வி,  அறிவியல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் நெருங்கிய ஒத்துழைப்பைக் கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.

கடந்த சில ஆண்டுகளில் இரு நாடுகளிடையான உறவுகளில் குறிப்பிடத் தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். இரு நாடுகளிடையே ஆண்டு மாநாடு நடத்தும் அமைப்பு முறையை உருவாக்கியது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments