கண்மண் தெரியாத போதை : உற்சாக நடன ஆட்டத்தில், தன்னை தானே கத்தியால் குத்திக் கொண்ட இளைஞர்..!

0 3357

த்திய பிரதேச மாநிலத்தில் மதுபோதையில் நடனமாடிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர், தன்னை தானே கத்தியால் குத்திக்கொண்டதை அடுத்து அவர் உயிரிழந்தார்.

இந்தூரில் ஹோலி கொண்டாட்டத்தின்போது பாடலுக்கு ஏற்ப நடனமாடிக்கொண்டிருந்த கோபால் என்பவர், மதுபோதையில் கையில் வைத்திருந்த கத்தியை வைத்து தன்னுடைய நெஞ்சில் குத்திக்கொண்டார்.

கத்தி நெஞ்சில் இறங்கியதை அறியாத அந்த இளைஞர், வலி ஏற்பட்டு ரத்தம் கசிந்த பின்பே தன்னை தானே குத்திக் கொண்டதை உணர்ந்தார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக கோபாலை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில்,  ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments