மாற்றுத்திறனாளி தாயை அடித்துக் கொன்ற மகன் : மது குடிக்கப் பணம் தராததால் கொடூர செயல்.!

0 2804

ன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே மாற்றுத்திறனாளியான 75 வயது தாயை குடிபோதையில் அடித்துக் கொன்ற மகன் கைது செய்யப்பட்டான்.

செப்பள்ளிவிளை சேர்ந்தவர்கள் தேவராஜ் - சரோஜினி தம்பதி. மாற்றுத்திறனாளியான சரோஜினிக்கு விஜயன் என்ற மகன் உள்ளான். மதுவுக்கு அடிமையான விஜயன் தினசரி குடித்துவிட்டு வந்து தாயை அடித்துத் துன்புறுத்துவது வழக்கம் என்று கூறப்படுகிறது.

நேற்று வழக்கம்போல் மது குடித்துவிட்டு வந்த விஜயன், கூட்டுறவு கடன் சங்கத்திலிருந்து கடனாக வாங்கி வைத்திருந்த பணத்தைக் கேட்டு சரோஜினியிடம் சண்டையிட்டுள்ளான்.

அவர் தர மறுக்கவே, அருகிலிருந்த மரக்கட்டை ஒன்றை எடுத்து, அவரது தலையில் அடித்துக் கொன்றுள்ளான்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments