விராலிமலை அருகே விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டியில் தடுப்புகள் சரிந்து விழுந்ததால் பரபரப்பு..!

0 4015

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே பெரிய குரும்பப்பட்டியில் காயாம்பு அய்யனார் கோவில் திருவிழாவை முன்னிட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டி தடுப்புகள் சரிந்து விழுந்ததன் காரணமாக பாதியில் நிறுத்தப்படமொத்தம் 725 காளைகள் பங்கேற்றிருந்த நிலையில் 481 காளைகள் களமிறக்கப்பட்டிருந்த போது திடீரென வாடிவாசல் அருகே கட்டப்பட்டிருந்த தடுப்புகள் சரிந்து விழுந்துள்ளன.

இதையடுத்து மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியதன் பேரில் பாதுகாப்பு கருதி போட்டி நிறுத்தப்படுவதாக இலுப்பூர் கோட்டாட்சியர் குழந்தை சாமி அறிவித்தார். போட்டியின் போது காளைகள் முட்டியதில் 25-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்திருந்த நிலையில் 11 பேர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments