விருந்தில் கறித்துண்டு கம்மியாக இருந்ததால், நண்பனுக்கு கத்திக்குத்து : கறி பீஸால் வெறிப்பிடித்து நண்பர்கள் பழிக்கு பழி

0 3641

ந்திர மாநிலம் கடப்பாவில் விருந்து நிகழ்ச்சியில் கறித்துண்டு கம்மியாக போட்டதாக கூறி நண்பர்களுக்கு இடையே உருவான தகராறு கொலையில் முடிந்துள்ளது.

நண்பர்களான ஷேர்கானும், சிவாவும் சில நாட்களுக்கு முன் விருந்து ஒன்றில் பங்கேற்றனர். அப்போது, உணவு பரிமாறிய ஷேர்கான் சிவாவுக்கு இறைச்சித் துண்டுகளை கம்மியாக வைத்ததாக கூறப்படும் நிலையில், அதனை கேட்டு சிவா வம்பிழுத்ததோடு, ஷேர்கானை கத்தியால் குத்தியதாக சொல்லப்படுகிறது.

காயமடைந்த ஷேர்கான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில், டிஸ்சார்ஜ் ஆன ஷேர்கான், தனது நண்பர்கள் உதவியுடன் சிவாவை கொலை செய்ய திட்டம் தீட்டியிருக்கிறான்.

நேற்றிரவு வீட்டுக்கு அருகே நின்று கொண்டிருந்த சிவாவை ஷேர்கானின் நண்பர்கள் இரண்டு பேர் வந்து சமாதானம் பேசலாம் எனக் கூறி ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்றதோடு, கொலை செய்து சடலத்தை ஆட்டோவில் ஏற்றிச் சென்று குழிதோண்டி புதைத்ததாக கூறப்படுகிறது.

சிவாவை காணவில்லை என பெற்றோர் அளித்த புகார் மீது போலீசார் நடத்திய விசாரணையில் கொலை சம்பவம் வெளிச்சத்துக்கு வந்த நிலையில், ஷேர்கானின் நண்பர்கள் இருவரை கைது செய்த போலீசார், அவனை தேடி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments