"வேலை கிடைக்காதவர்கள் சோர்ந்து விடக்கூடாது"... விடா முயற்சி அவசியம்.! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 2396

சென்னை அடுத்த வண்டலுரில் 500-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்ற மாபெரும் வேலைவாய்ப்பு முகாமை துவக்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் வேலையின்மையே இல்லை என்ற நிலை உருவாக்கப்படும் என உறுதியளித்தார்.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் நடைபெற்ற முகாம் மூலம் வேலைவாய்ப்பு பெற்ற இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் அவர் வழங்கினார்.

மேலும், அரசுப் பணிகளுக்கு நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கு கல்வி தொலைக்காட்சி வழியாக பயிற்சி வழங்கும் திட்டத்தையும் முதலமைச்சர் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வேலை வாய்ப்பை பெற்றவர்கள் திறமைகளை வளர்த்து மேலும் முன்னேற வேண்டும் எனவும், வேலை கிடைக்காதவர்கள் சோர்ந்து விடாமல் திறன்களை வளர்த்துக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments