நம்ம ஊரு திருவிழா - முதலமைச்சர் வரவேற்பு

0 2558
தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் சென்னைத் தீவுத்திடலில் மார்ச் 21 அன்று மாலை நடைபெறும் நம்ம ஊரு திருவிழாவுக்கு அனைவரையும் வரவேற்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் சென்னைத் தீவுத்திடலில் மார்ச் 21 அன்று மாலை நடைபெறும் நம்ம ஊரு திருவிழாவுக்கு அனைவரையும் வரவேற்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னைத் தீவுத்திடலில் திங்கள் மாலை 6 மணி முதல் அருந்தமிழ்க் கலைகளின் விழா நடைபெற உள்ளது. இதைக் கண்டுகளிக்க அனைவருக்கும் அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், மண்ணின் கலையும்; மக்களின் இசையுமாகக் கலை பண்பாட்டுத் துறை ஒருங்கிணைக்கும் நம்ம ஊரு திருவிழா சென்னைத் தீவுத்திடலில் நடைபெறுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மண்ணின் பண்பாட்டையும் தனித்தன்மையையும் நானூற்றுக்கு மேற்பட்ட கலைஞர்கள் பறைசாற்ற உள்ளதாகவும், இந்தத் திருவிழாவுக்கு அனைவரையும் வரவேற்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments