தமிழகத்தில் 4 கோடிக்கும் அதிகமானோர் இரு டோஸ் செலுத்திக் கொண்டனர் - ராதாகிருஷ்ணன்

0 1350
தமிழகத்தில் இதுவரை நான்கு கோடிக்கும் அதிகமானோர் இரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக தெரிவித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மக்கள் தடுப்பூசி செலுத்துதை தங்கள் பங்களிப்பாக கருத வேண்டும் என்றார்.

தமிழகத்தில் இதுவரை நான்கு கோடிக்கும் அதிகமானோர் இரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக தெரிவித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மக்கள் தடுப்பூசி செலுத்துதை தங்கள் பங்களிப்பாக கருத வேண்டும் என்றார். 

சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் 4 வகையான ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பொது சுகாதார வல்லுனர்களின் ஆலோசனைகளை தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் தான் நாளொன்றுக்கு 60க்கும் கீழ் கொரோனா பதிவாவதாக கூறினார்.

தென் கொரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா 4-வது அலை வீசத் தொடங்கி உள்ளதாகவும், மக்கள் முககவசம் அணிவதை மறப்பது கவலையளிப்பதாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments