கேரளாவில் கால்பந்து ஆட்டத்தின் போது கேலரி உடைந்து விபத்து... 60 பேர் படுகாயம்

0 5751

கேரளா மலப்புரத்தில் கால்பந்து ஆட்டத்தின் போது கேலரி உடைந்து விழுந்ததில் 60 பேர் படுகாயம் அடைந்தனர்.

பூங்கோடு கிராமத்தில் நடந்த உள்ளூர் கால்பந்து போட்டியை காண ஏறத்தாழ 2 ஆயிரம் பேர் திரண்டதாக கூறப்படும் நிகையில் பனமரக் கட்டைகளை கொண்டு தற்காலிகமாக அமைக்கப்பட்ட கேலரி அளவுக்கு அதிகமான பார்வையாளர்களை தாங்க முடியாமல் உடைந்து விழுந்தது.

 விபத்தில் 60 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். கேலரி உடைந்த ஆத்திரத்தில் அங்கிருந்த கோப்பைகள் உள்ளிட்ட பொருட்களை பொது மக்கள் அடித்து நொறுக்கி சூறையாடினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments