உக்ரைன் போர்க்கள சூழலில் குதிரையை காக்க தனது உயிரை பணயம் வைத்த இளம் பெண்

0 1895

உக்ரைனில் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கிருந்த தனது குதிரை ஒரு பெண் பத்திரமாக மீண்டுள்ளார்.

கீவ் நகரைச் சேர்ந்த மாஷா லெபிமோவா, எஸ்டோனியாவில் வசிக்கும் நிலையில், அவரது குதிரையான வாஷ்யா, உக்ரைனில் உள்ள அவரது சொந்த வீட்டில் வளர்க்கப்பட்டு வந்தது.

கீவ் நகரை சுற்றிலும் தாக்குதல் நடைபெறும் நிலையில், குதிரையை காக்க எண்ணிய மாஷா, உயிரை பணயம் வைத்து, எஸ்டோனியாவில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பினார். அவரது குதிரை இருந்த பண்ணையில் மேலும் 6 குதிரையும் இருந்த நிலையில், அங்குள்ளவர்களுடன் சேர்ந்த மாஷா, வாஷ்யாவை அழைத்துக் கொண்டு புறப்பட்டார்.

குண்டு மழைக்கு இடையிலும், குளிருக்கு நடுவிலும், பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்ட சூழலிலும், அவர், தம்மையும் காத்து, குதிரையையும் காப்பாற்றி போலந்து எல்லை கிராமத்திற்கு பத்திரமாக வந்து சேர்ந்துள்ளார். வாயில்லா ஜீவனை காக்க, உயிரை பணயம் வைத்து வந்த மாஷாவின் செயல்,இணையத்தில் வைரலாகி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments