தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு ; சென்னை வானிலை மையம்

0 2328
தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு ; சென்னை வானிலை மையம்

வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்த செய்திக் குறிப்பில், வரும் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான அளவில் மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பில்லை, வானம் மேகமூட்டத்துடன் மட்டும் காணப்படும் என்றும் அம்மையம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், தென் கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக அந்தமான், மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் 4 நாட்களுக்கு அங்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments