தும்கூரில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 8 பேர் பலி - 20 பேர் படுகாயம்

0 1684

கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர்.

மாணவர்கள் உட்பட மேலும் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் உடனடியாக அருகே உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தும்கூரில் உள்ள பவகாடா என்ற பகுதியில் சாலையில் அதிவேகமாக சென்றுகொண்டிருந்த பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments