திருமணம் செய்ய வலியுறுத்தியதால் காதலி மீது பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த காதலன்

0 2108

கர்நாடக மாநிலம் பெங்களூரில் திருமணம் செய்ய வலியுறுத்தியதால் காதலி மீது பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த காதலன்-ஐ போலீசார் தேடி வருகின்றனர்.

பாகல்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சிவக்குமாரும்- தானிஷ்வரியும் கல்லூரியில் படிக்கும் போதில் இருந்தே காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், தன்னை திருமணம் செய்துக்கொள்ளும்படி ரவிக்குமாரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்த தானிஷ்வரி, கடந்த 16ஆம் தேதி அவரை நேரில் சந்தித்து திருமணம் குறித்து பேசியுள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில் பாட்டிலில் வைத்திருந்த பெட்ரோலை தானிஷ்வரி மீது ஊற்றி தீ வைத்துவிட்டு சிவக்குமார் தப்பிச்சென்றததாக கூறப்படுகிறது.

தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தானிஷ்வரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் இச்சம்பவம் குறித்து எலக்ட்ரானிக் சிட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments