குண்டு மழை பொழிந்து வருவதால் கீவ் நகரின் மெட்ரோ சுரங்கங்களில் குழந்தைகள், பெண்கள் தஞ்சம்.!

0 2874

உக்ரைனின் தலைநகர் கீவ் மீது ரஷ்யப் போர் விமானங்கள் வட்டமிட்டு குண்டு மழை பொழிந்து வருவதால் குழந்தைகள், பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் மெட்ரோ ரயில் சுரங்கங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

போர் 24 வது நாளை எட்டிய நிலையில் இரவு நேரங்களில் அதிகரிக்கும் மக்கள் கூட்டத்தால் சுரங்கங்களின் உள்ளே வாழும் மக்களின் வாழ்க்கை பரிதாபகரமாக மாறி வருகிறது.

பொழுதுபோக வழியில்லாமலும் உணவு குடிநீர் போன்ற அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாகாமலும் சுகாதார குறைபாடுகளும் இங்குள்ள மக்களை வருத்தி வாட்டுகின்றன.

குளிப்பதற்கும் உணவு சமைத்து எடுத்து வரவும் அவர்கள் உயிரைப் பணயம் வைத்து தங்கள் வீடுகளுக்குச் சென்று மீண்டும் மெட்ரோவுக்கு திரும்பி வருகின்றனர்.இரவில் நிம்மதியாக உறங்கி பல நாட்களாகி விட்டதாக அங்குள்ளவர்கள் கூறுகின்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments