கர்தார்பூரில் நடக்கவிருந்த கலாச்சார விழாவை ரத்து செய்தது பாகிஸ்தான்.!

0 1547

சீக்கிய அமைப்பின் எதிர்ப்பு காரணமாக கர்தார்பூர் குருத்வாரா அருகே நடத்தத் திட்டமிட்டிருந்த கலாச்சார விழாவை பாகிஸ்தான் ரத்து செய்துள்ளது.

கர்தார்பூர் சாஹிப் குருத்வரா அருகே வரும் 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை ஜஷன்-இ-பஹார் என்ற கலாச்சார விழாவை நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டிருந்தது.

ஆனால் கர்தார்பூர் குருத்வாரா சீக்கிய நிறுவனர் குருநானக்குடன் தொடர்பில் இருந்ததால் அதன் புனிதம் கெட்டு விடும் என ஷிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி எதிர்ப்புத் தெரிவித்தது. இதையடுத்து கலாச்சார விழா நிறுத்தப்படுவதாகவும், எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நிகழாது என்றும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments