உக்ரைனில் உயிரிழந்த கர்நாடக மாணவரின் உடல் திங்கட்கிழமை இந்தியா வருகை.!

0 2579

உக்ரைனில் உயிரிழந்த 21 வயதான கர்நாடக மாணவர் நவீன் சேகரப்பாவின் உடல் திங்கட்கிழமை கொண்டு வரப்படுவதாக கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

கார்கீவ் தேசிய மருத்துவ பல்கலைக்கழகத்தில் பயின்ற நவீன் சேகரப்பா, உணவு வாங்க சென்ற போது ரஷ்ய ராணுவத்தின் குண்டுவீச்சில் உயிரிழந்தார்.

நவீனின் உடலை சொந்த ஊர் கொண்டு வருமாறு உறவினர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தனர். வரும் ஞாயிற்றுக்கிழமை நவீனின் உடல் பெங்களூரு விமான நிலையம் கொண்டு வரப்படும் என்றும், திங்கட்கிழமை உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்படுமென கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.        

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments