சட்டவிரோதமாக குழந்தை விற்பனை - 6 பேர் கைது

0 1259
சட்டவிரோதமாக குழந்தை விற்பனை - 6 பேர் கைது

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே குழந்தை விற்பனை தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சுந்தரலிங்கம் - கோமதி தம்பதிக்கு திருமணமாகி 10 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை. இதனையடுத்து தங்களது உறவினரான மகேஸ்வரி என்பவர் மூலம் சேலத்தைச் சேர்ந்த அண்ணாமலை - அம்பிகா தம்பதிக்குப் பிறந்த ஆண் குழந்தை ஒன்றை கடந்த 2019ஆம் ஆண்டு 45 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளனர்.

சில தினங்கள் கடந்த நிலையில், குழந்தையை அரசின் விதிமுறைப்படி முறையாகத் தத்து எடுக்காததால், சட்ட நடவடிக்கைகள் பாயும் என அக்கம்பக்கத்தினர் கூறியுள்ளனர்.

இதனால் பயந்துபோன சுந்தரலிங்கம் - கோமதி தம்பதி குழந்தையை மதுரையிலுள்ள காப்பகம் ஒன்றில் ஒப்படைத்துள்ளனர். அதனையறிந்த அண்ணாமலை - அம்பிகா தம்பதி, நீதிமன்றம் மூலமாக குழந்தையை காப்பகத்திலிருந்து பெற்றுக் கொண்டனர்.

இருப்பினும் சட்டவிரோத குழந்தை விற்பனை தொடர்பாக சமூக நலத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் அண்ணாமலை - அம்பிகா தம்பதி, சுந்தரலிங்கம் கோமதி தம்பதி, மகேஸ்வரி உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments