தஞ்சையில் பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளங்குழந்தையை கால்வாயில் வீசிவிட்டுச் சென்ற இளம்பெண்

0 4596

தஞ்சையில் பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளங்குழந்தையை இளம்பெண் ஒருவர் கால்வாயில் வீசிவிட்டுச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

மேலஅலங்கம் பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் தொப்புள் கொடியுடன் பச்சிளம் ஆண் குழந்தையின் சடலம் கிடந்துள்ளது. அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்த போது, நைட்டி அணிந்து கொண்டு வந்த இளம்பெண் ஒருவர் சிறிய சாக்குப்பையில் பச்சிளம் குழந்தையை தூக்கி எடுத்து வந்து கால்வாயில் போட்டுவிட்டுச் சென்ற காட்சிகள் பதிவாகியிருந்தது.

இந்த சிசிடிவி காட்சிகளை வைத்து அதே பகுதியைச் சேர்ந்த அந்த இளம்பெண்ணை பிடித்த போலீசார், அவரிடமும் அவரது கணவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments