தெலங்கானாவில் ஏர்-கன் துப்பாக்கியால் சுட்டதில் 4வயது சிறுமி உயிரிழப்பு

0 2465

தெலங்கானா மாநிலம் சங்கா ரெட்டி மாவட்டம் அடுத்த வாவிலாலா கிராமத்தில் குரங்குகளை விரட்ட வைத்திருந்த ஏர்-கன் துப்பாக்கியை 17வயது சிறுவன் இயக்கிய போது அதிலிருந்து வெளியேறிய குண்டு தாக்கியதில் 4 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பிரசாத் என்பவர் தன் தோட்டத்திற்கு வரும் குரங்குகளை விரட்ட ஆன்லைன் மூலம் ஏர்-கன் துப்பாக்கி வாங்கியதாகவும், அதை தோட்ட காவலாளி நாகராஜ் வீட்டில் வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. நாகராஜின் 17வயது மகன் வீட்டிற்கு வந்த உறவினர்களுடன் சேர்ந்து துப்பாக்கியை இயக்கிப் பார்த்த போது எதிரே வந்த 4வயது சிறுமியின் தலையில் குண்டு பட்டு சுருண்டு விழுந்ததாக கூறப்படுகிறது.

சிறுமி குறித்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரில் துபாக்கி உரிமையாளர் பிரசாத் மற்றும் 17வய்து சிறுவனை பிடித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments