உத்தரபிரதேசத்தில் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் உடனடியாக விலக்கிக் கொள்ளப்படுவதாக அரசு அறிவிப்பு.!

0 1812

உத்தரபிரதேசத்தில் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் உடனடியாக விலக்கிக் கொள்ளப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் வேகமாக குறைந்து வருவதை அடுத்து கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கிக் கொள்ளப்படுவதாக உள்துறை முதன்மைச் செயலாளர் அவ்னீஷ் குமார் அவாஸ்தி தெரிவித்துள்ளார்.

மாநிலத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடிகளும் முழுவீச்சில் இயங்கவும், திருமண, பொது, கலாசார, இறப்பு உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு கலந்து கொள்வோருக்கு விதிக்கப்பட்ட தடை என அனைத்தும் திரும்பப் பெறப்படுவதாக தெரிவித்தார்.

மேலும் நீச்சல் குளங்கள், கடற்கரை பூங்காக்கள், கேளிக்கை விடுதிகள் முழு அளவில் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments