ரஷ்யாவுடனான போர் நிறுத்த பேச்சுவார்த்தை மிகவும் சிக்கலானது - உக்ரைன் அதிபர்

0 1811

ரஷ்யாவுடனான போர் நிறுத்த பேச்சுவார்த்தை மிகவும் சிக்கலானது என உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 22 ஆவது நாளாக நீடித்து வரும் நிலையில், இரு நாடுகளும் அமைதி பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொண்டுள்ளன. ஏற்கனவே இரு நாடுகள் இடையே நடைபெற்ற நான்கு கட்ட பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்படாத நிலையில், போரை நிறுத்த சர்வதேச நீதிமன்றமும் உத்தரவிட்டிருப்பதால், விரைவில் போர் நிறுத்தம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில், ரஷ்யாவுடனான போர் நிறுத்த பேச்சுவார்த்தை மிகவும் சிக்கலாக உள்ளது எனவும், ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது கடினம் எனவும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments