திருப்பூரில் எஸ்.பி.ஐ வங்கியில் அடகு வைத்த நகைகளில் சிறு சிறு பகுதிகளை திருடிய வங்கியின் நகை மதிப்பீட்டாளர் கைது.!

0 1921

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே எஸ்.பி.ஐ வங்கியில் அடகு வைத்த நகைகளில் கொக்கி, மணிகள் உள்ளிட்ட சிறு சிறு பகுதிகளை திருடியதாக வங்கியின்  நகை மதிப்பீட்டாளர் கைது செய்யப்பட்டார்.

கேத்தனூரில் உள்ள எஸ்.பி.ஐ வங்கி கிளையில் நகை மதிப்பீட்டாளராக சேகர் என்பவர் பணிபுரிந்து வரும் நிலையில் வாடிக்கையாளர்கள் அடமானம் வைத்த நகைகளின் செயினில் இருந்த கொக்கி, மணி உள்ளிட்ட சில பகுதிகளை அவர் நூதனமாக களவாடியதாக கூறப்படுகிறது.

இதனிடையே, நகைகளை மீட்ட போது அளவுகள் மாறி இருப்பதை அறிந்த வாடிக்கையாளர்கள் சிலர், வங்கி கிளை மேலாளரிடம் முறையிட்ட போது சேகர் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட நிலையில் அவர் மீது எந்தவித நடவடிக்கை எடுக்காததாக சொல்லப்படுகிறது.

இதனையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் நகை மதிப்பீட்டாளர் சேகரை கைது செய்த  போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments