மதுரை மேலூர் அருகே களைகட்டிய மீன்பிடி திருவிழா!

0 2846

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அய்யமுத்தப்பட்டியில் உள்ள கரை முனியாண்டி சுவாமி கோவிலுக்கு சொந்தமான பூலான்குடி கண்மாயில் விவசாயம் செழிக்க வேண்டியும், கிராம மக்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டியும் மீன் பிடி திருவிழா நடைபெற்றது.

இதில் அந்த கிராமத்தினர் மட்டுமல்லாமல் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் வந்த மக்கள் கண்மாயில் இறங்கி ஆர்வமுடன் மீன் பிடித்தனர்.

பிடித்த மீன்களை அவர்கள் தங்களது வீடுகளுக்கு எடுத்துச்சென்று சாமிக்கு படையலிட்ட பின்பு சமைத்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments