டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற கும்பல்-காவலர்களை தாக்கிவிட்டு தப்பியோட்டம்

0 1769
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே டாஸ்மாக்கில் கொள்ளையை தடுக்க முயன்ற காவலர்களை, இரும்பு ராடால் தாக்கிவிட்டு தப்பியோடிய 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே டாஸ்மாக்கில் கொள்ளையை தடுக்க முயன்ற காவலர்களை, இரும்பு ராடால் தாக்கிவிட்டு தப்பியோடிய 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கீழவளம் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் அதிகாலை 3 மணியளவில் மர்ம நபர்கள், இரும்பு ராடைக் கொண்டு ஷட்டரின் பூட்டை உடைக்க முயன்றனர். அச்சமயம் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராஜேஷ், சதீஷ்குமார் ஆகிய காவலர்கள் பூட்டை உடைக்கும் சத்தம் கேட்டு அங்கு சென்று அவர்களை பிடிக்க முயன்றனர்.

அப்போது காவலர்கள் இருவரையும் தாக்கிவிட்டு, தாங்கள் வந்த இருசக்கர வாகனங்களையும் அங்கேயே விட்டுவிட்டு கொள்ளையர் தப்பியோடியுள்ளனர். மர்ம நபர்களின் தாக்குதலில் ஒரு காவலருக்கு முகத்தில் வெட்டுக்காயம் ஏற்பட்ட நிலையில், மற்றொரு காவலரும் லேசான காயமடைந்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments