மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பற்றி எரிந்த காட்டுத்தீ 72 மணி நேர போராட்டத்திற்கு பின் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது

0 866

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பற்றி எரிந்த தீயானது 72 மணி நேர போராட்டத்திற்கு பின் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

தீயை அணைக்கும் பணியில் 50க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். எந்தவித தொழில்நுட்பமும் பயன்படுத்த முடியாத சூழலில் வீரர்களின் கடுமையான போராட்டத்திற்குப் பின் தீ மேலும் பரவாத அளவுக்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

உட்பகுதியில் பற்றி எரிந்து கொண்டு இருக்கும் தீயை அணைக்கும் முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments