டிராக்டரின் பின்பக்கத்தில் இருக்கும் டிராலி மீது லாரி மோதி கோர விபத்து... சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழப்பு - 17 பேர் படுகாயம்

0 2138

சத்தீஸ்கர் மாநிலம் காரியாபந்த் மாவட்டத்தில், டிராக்டரின் பின்பக்கத்தில் இருக்கும் டிராலியின் மீது லாரி மோதிய கோர விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் 17 பேர் படுகாயமடைந்தனர். மஜர்கட்டா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மொஹலாய் கிராமத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு திரும்பிக் கொண்டிருந்த போது, காரியாபந்தில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜோபா பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

டிராக்டர் வளைவில் திரும்பும் போது, பின்னால் வந்த லாரி டிராக்டரின் பின்பக்கத்தில் இருக்கும் டிராலி மீது மோதி விபத்துக்குள்ளானதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரமும் நிவாரணம் அறிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments