வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை ; போலீசார் விசாரணை

0 1103
வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை ; போலீசார் விசாரணை

சென்னை அடுத்த பெருங்களத்தூரில் வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், அதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பி.காம். முதலாம் ஆண்டு படித்து வந்த ஹெனாகிராஸ் என்ற மாணவி, 2 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படும் நிலையில், சனிக்கிழமை இரவு சாப்பிடுவதற்கு பன்னீர் பட்டர் மசாலா வேண்டுமென தனது தாயிடம் கேட்டதாக சொல்லப்படுகிறது.

ஆனால், உடல் நிலை சரியில்லாததை காரணம் காட்டி, பன்னீர் பட்டர் மசாலா வாங்கிக் கொடுக்காத நிலையில், கோபமுற்ற மாணவி, வேறொரு அறைக்குச் சென்று படுத்து உறங்கியதாக கூறப்படுகிறது.

காலையில் ஹெனாகிராஸின் தாயும், சகோதரியும் தேவாலயத்திற்கு சென்றுவிட்ட நிலையில், வீட்டில் தனியாக இருந்த மாணவி, சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது.

பன்னீர் பட்டர் மசாலா கேட்டு வாங்கித் தராததால் கோபமாக இருந்த மாணவி, தற்கொலை செய்து கொண்டிருக்கும் நிலையில், தற்கொலைக்கு அது தான் காரணமா? அல்லது வேறு ஏதும் காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments