அதிவேகமாக ஓட்டிவரப்பட்ட கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து... நூலிழையில் உயிர்தப்பிய போலீசார்... பதறவைக்கும் சிசிடிவி

0 3595

கேரளாவில் அதிவேகமாக ஓட்டிவரப்பட்ட கார், கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சாலையோரமாக நின்றிருந்த வாகனங்கள் மீது மோதிய விபத்தில் இரண்டு போலீசார் நூலிழையில் உயிர் தப்பிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. விவேக் என்ற இளைஞர் தனது நண்பர்கள் இருவருடன் காரில் சென்று கொண்டிருந்தார்.

காக்கநாடு பகுதியில் வந்து கொண்டிருந்த போது, அதிவேகத்தால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், செண்டர் மீடியனில் மோதியதாக கூறப்படுகிறது. செண்டர் மீடியனில் மோதிய வேகத்தில் கார் ஒருபுறமாக திரும்பிய நிலையில், திரும்பிய நிலையிலேயே சாலையோரம் இருந்த வாகனங்களை இடித்து தூக்கி வீசியது.

அங்கிருந்த கம்பத்தில் மோதி தாறுமாறாக சென்ற கார், இன்ஃபோ பார்க் காவல் நிலையம் அருகே சுவற்றில் மோதி நின்றது. அப்போது, இரண்டு போலீசார் பைக்கில் காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்த நிலையில், அவர்கள் இருவரும் நூலிழையில் உயிர் தப்பினர்.

காருக்குள் இருந்த மூவரும் மீட்கப்பட்டு மருத்துவமனை அனுப்பி வைக்கப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments