உக்ரைனில் அடுக்குமாடி குடியிருப்பின் மீது வீசப்பட்ட பிரமாண்டமான வெடிக்காத குண்டு பாதுகாப்பாக அகற்றம்

0 1913

ரஷ்யா உக்ரைன் மீது வீசிய பிரமாண்டமான வெடிக்காத குண்டு பாதுகாப்பாக அகற்றப்பட்டது.

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பின் போது செர்னிஹிவ் என்ற நகரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கநேற்று முன் தினம் ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதலில் செர்னிஹிவ் அடுக்கு மாடிக் குடியிருப்பில் அடுத்தடுத்து குண்டுகள் வீசப்பட்டன. இதில் OFAB-500 என்ற பிரமாண்ட குண்டுகளும் வீசப்பட்டன.

குடியிருப்பு வளாகத்தில் வீசப்பட்ட ஒரு குண்டு வெடிக்காமல் இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அந்த குண்டு பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் அங்கிருந்து அகற்றப்பட்டது. பின்னர் வெடிகுண்டு நிபுணர்களால் OFAB-500 குண்டு செயலிழக்க வைக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments