போதையில் இருந்த குடிமகனை அடித்து உதைத்து இழுத்துச் சென்ற மூன்று போலீஸ்காரர்கள் பணியிடை நீக்கம்.!

0 1864

போதையில் இருந்த குடிமகனை அடித்து உதைத்து இழுத்துச் சென்ற மூன்று போலீஸ்காரர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தூர் நகரில் அந்த மூன்று போலீஸ்காரர்கள் குடிமகனை அடித்து உதைக்கும் வீடியோ காட்சி வைரலானது அடுத்து மேலதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஹீரா நகர் காவல்நிலையம் அருகில் இரண்டு பேர் போதையில் அட்டகாசம் செய்வதாக புகார் வந்தது.

இதையடுத்து குடிகாரர்களை கைது செய்யச் சென்றபோது, ஒருவன் தாக்க முற்பட்டதால், அவனை போலீசார் எட்டி உதைத்து அடித்தனர். ஆடைகள் களைந்த குடிபோதை ஆசாமியை போலீசார் தாக்கிய காட்சிகள் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பி விட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments