ஏடிஎம் மையத்தில் தீ விபத்து : கல்லூரி வாயிலில் இருந்த ஏடிஎம் முழுவதும் எரிந்து கருகி நாசம்

0 2633

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் மையம் ஒன்று தீப்பிடித்து முற்றிலுமாக எரிந்து நாசமானது. சாத்தூர் SRNM கலை மற்றும் அறிவியல் கல்லூரி நுழைவு வாயிலில் அமைந்துள்ள அந்த ஏடிஎம் மையத்துக்குள் இருந்து மாலை கரும்புகை வெளியேறி இருக்கிறது.

தகவலறிந்து தீயணைப்புத்துறையினர் வருவதற்குள் ஏ.டி.எம் மையம் முழுவதுமாக தீப்பற்றி எரியத் தொடங்கியது. உள்ளே இருந்த ஏ.டி.எம் இயந்திரம், ஏசி இயந்திரம் உள்ளிட்டவை எரிந்து உருகிக் கருகின. தீயணைப்புத்துறையினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மின்சுற்றில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீப்பற்றி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நிலையில், இயந்திரத்துடன் எரிந்து சாம்பலான பணத்தின் மதிப்பு எவ்வளவு என்பது ஆய்வுக்குப் பிறகே தெரியவரும் என வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments