குடியரசுத் தலைவர் பதவிக்கு என்னுடைய பெயரா? நான் ஒரு சாதாரண குடிமகள்.. அவ்வளவு தான் - தமிழிசை சவுந்தரராஜன்

0 3117

புதுச்சேரியில் மார்ச் 27ஆம் நாள் விமானப் போக்குவரத்து தொடங்க உள்ளதாகத் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுச்சேரியில் விமானப் போக்குவரத்து தொடங்குவதால் சுற்றுலா மேம்படும் என்றும், கடலூர், நாகப்பட்டினம் மக்களுக்கும் பயனுள்ளதாக அமையும் என்றும் தெரிவித்தார்.

குடியரசுத் தலைவர் பதவிக்குத் தமிழிசையின் பெயர் பரிசீலிக்கப்படுவதாகக் கூறப்படுவது குறித்த செய்தியாளரின் வினாவுக்கு, நான் ஒரு சாதாரண குடிமகன்..அவ்வளவு தான் என அவர் பதிலளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments