அலங்கார கற்கள் என்ற போர்வையில் கடத்தப்பட்ட நான்கரை கோடி ரூபாய் மதிப்பிலான வைரக்கற்கள் பறிமுதல்

0 1655
அலங்கார கற்கள் என்ற போர்வையில் கடத்தப்பட்ட நான்கரை கோடி ரூபாய் மதிப்பிலான வைரக்கற்கள் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில், மலிவு விலை அலங்கார கற்கள் என்ற பெயரில் கடத்தப்பட்ட நான்கரை கோடி ரூபாய் மதிப்பிலான வைரக்கற்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ரகசியத் தகவலின் அடிப்படையில், சென்னை விமான நிலையம் வந்த பார்சலை சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் பிரித்து பார்த்தனர். 5 லட்ச ரூபாய் மதிப்பிலான அலங்கார கற்கள் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்த அந்த பார்சலில் வைரம், கோமேதகம் மற்றும் நீலக்கற்கள் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

நான்கரை கோடி ரூபாய் மதிப்பிலான விலை உயர்ந்த கற்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவற்றை அனுப்பியது யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments