வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் திருடர்கள் கைவரிசை: சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கணவன், மனைவி உள்பட 3 பேர் கைது

0 2449

சென்னை கொளத்தூரில், வீட்டில் தனியாக இருந்த பெண்மணியிடம் நகைகளை பறித்து விட்டு, வீட்டிற்கு வந்த அப்பெண்மணியின் மகனை விரட்டி விரட்டி கத்தியால் தாக்கியது தொடர்பாக கணவன், மனைவி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

நன்பகல் வேளையில், திடீரென வீட்டிற்குள் புகுந்த 2 இளைஞர்கள், அங்கிருந்த பெண்மணியிடம் கத்தியை காட்டி மிரட்டி 4 சவரன் நகைகள் மற்றும் 2 செல்போன்களை பறித்தனர்.

அப்போது வீட்டிற்கு வந்த அவரது மகன் பாபாஜியை கதவுக்கு பின்னால் மறைந்து நின்று, முதுகில் கத்தியால் தாக்கி விட்டு அவர்கள் தப்பி ஓடினர்.

சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போலீசார், இதில் தொடர்புடைய கார்த்திக் மற்றும் பாலாஜியை கைது செய்தனர். பெண்கள் தனியாக வசிக்கும் வீடாக பார்த்து நோட்டமிட்டு அவர்களுக்குத் தெரிவித்த பாலாஜியின் மனைவி திவ்யாவையும் போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments