வேலூரில் சிமெண்ட் கலவை வாகன இயந்திரம், ஆட்டோ மீது கவிழ்ந்து விபத்து.!

0 3527

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் சிமெண்ட் கலவை ஏற்றி சென்ற வாகனம் ஆட்டோ மீது கவிழும் சிசிடிவி வெளியாகி உள்ளது.

சத்துவாச்சாரியில் இருந்து வேலூர் நோக்கி சிமெண்ட் ஜல்லி கலவை எந்திரம் பொருத்தப்பட்ட லாரி ஒன்று தேசிய நெடுஞ்சாலையில் சென்றது.அந்த லாரி சென்னை சில்க்ஸ் ஜவுளி கடை அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சர்வீஸ் சாலையில் இறங்கியது.

அப்போது லாரியில் பொருத்தப்பட்டிருந்த ஜல்லி கலவை எந்திரம் பாரம் தாங்காமல் தனியாக கழண்டு சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோவின் மீது அப்படியே விழுந்தது. இந்த விபத்தில் ஆட்டோ பெண் பயணி மற்றும் ஓட்டுனர் ஆகியோர் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments