புதுச்சேரியில் பெட்ரோல் பங்க்கில் காவலரைத் தாக்கிய போதை ஆசாமிகள்.!

0 1987

புதுச்சேரி எல்லைப் பகுதியிலுள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் மது போதையில் தமிழகக் காவலரை ரௌடிகள் சிலர் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் சதீஷ்குமார் என்பவர் காவலராகப் பணியாற்றி வருகிறார்.

கடந்த 9ஆம் தேதி கனகசெட்டிக்குளத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் அவர் தனது இருசக்கர வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு மது போதையில் வந்த 3 பேர் கொண்ட கும்பல், தங்களது பைக்குக்கு பெட்ரோல் நிரப்ப பணம் தருமாறு சதீஷ்குமாரை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. அதற்கு அவர் மறுக்கவே, அந்த கும்பல் சதீஷ்குமாரைத் தாக்கியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக காலாப்பட்டு காவல் நிலையத்தில் சதீஷ்குமார் அளித்த புகாரின் பேரில் மூர்த்தி என்பவனை கைது செய்த போலீசார், ராஜதுரை, குருநாத் ஆகிய இருவரைத் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments