பகவந்த் மான் பஞ்சாப் முதல்வராக மார்ச் 16ல் பதவியேற்பு

0 1880

பஞ்சாப் முதலமைச்சராகப் பொறுப்பேற்க உள்ள பகவந்த் மான் டெல்லியில் ஆம் ஆத்மிக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவாலின் காலைத் தொட்டுக் கும்பிட்டு வாழ்த்துப் பெற்றார்.

பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் ஆம் ஆத்மிக் கட்சி 92 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.

ஏற்கெனவே அந்தக் கட்சி சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பகவந்த் மான் சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். இந்நிலையில் டெல்லி சென்ற அவர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கேஜ்ரிவாலின் காலைத் தொட்டுக் கும்பிட்டு வாழ்த்துப் பெற்றார்.

கேஜ்ரிவாலைச் சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மார்ச் 16ஆம் நாள் முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளதாகத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments