இருசக்கர வாகனத்தின் பின்னால் மோதிய கார்… நிலைதடுமாறி விழுந்த தம்பதி… மனைவி உயிரிழப்பு - நிற்காமல் சென்ற கார்

0 3961

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருசக்கர வாகனத்தின் பின்னால் கார் மோதிய கோர விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

பழனி மருத்துவ நகரைச் சேர்ந்த பாண்டி - பாப்பாத்தி தம்பதி, மலை அடிவாரத்தில் கடை வைத்துள்ளனர். வியாழக்கிழமை மாலை வீட்டிலிருந்து கடைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே புறவழிச்சாலையில், பின்னால் வந்த கார் ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் தம்பதி இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில், பாப்பாத்தி மீது காரின் சக்கரங்கள் ஏறி இறங்கின.

படுகாயமடைந்த தம்பதியை மீட்டு அக்கம்பக்கத்தினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி பாப்பாத்தி உயிரிழந்தார். சிசிடிவி காட்சிகளைக் கொண்டு கார் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments