சென்னை அருகே நாய் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவர் மீது நடவடிக்கை கோரி புகார் மனு

0 1959

சென்னை அருகே செல்லப்பிராணியான நாய் மீது துப்பாக்கி சூடு நடத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சித்தலப்பாக்கத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவர்  சிக் குக் என்ற பெயரில் நாட்டு நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி காலை ஸ்ரீதர் வேலைக்கு செல்லும்போது சிக் குக் உடலில் ரத்த காயங்களுடன் வீட்டுக்கு வந்துள்ளது.

பின்னர் மாலையில் வந்து பார்த்தபோது ரத்தம் நிற்காமல் தொடர்ந்து வந்ததால் உடனடியாக அந்த செல்லப்பிராணியை அருகில் உள்ள தனியார் கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளார். அங்கு ஸ்கேன் எடுத்து பார்த்ததில் செல்லப்பிராணியின் உடலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பது தெரிய வந்தது.

இதனை அடுத்து அறுவை சிகிச்சை மூலம் அந்த துப்பாக்கி குண்டு அகற்றப்பட்டு தகுந்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments